கண்ணாடி போன்ற உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை மீரா சோப்ரா..!! ஹாட் போட்டோ ஷூட்!!

தமிழ் சினிமாவில் நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்திருந்த அன்பே ஆருயிரே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மீரா சோப்ரா.
இவர் 1983 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவரின் நிஜப்பெயர் மீரா சோப்ரா.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இதன் மூலம்
தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது.


இவர் தெலுங்கில் 2006 ஆம் ஆண்டு பங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் இவர் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படம் பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இவர் காளை லீ, ஜாம்பவான், மருதமலை, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு இசை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவருக்கு தமிழில்
அதிக பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை.கடைசியாக இந்தியில் செக்சன் 375 படத்தில் நடித்திருந்தார்.


தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கில் நஸ்டிக், மொகலி பூவு படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.அங்கு இவர் கண்ணாடி போன்ற உடையில் கவர்ச்சி காட்டி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.