ரகசியமாக வைத்திருந்த பிகினி புகைப்படம் வெளியானதால் கோபமான நடிகை நிதி அகர்வால்
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இந்தியில் முன்னமைக்கெல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நிதி அகர்வால்.பின்னர் சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.தமிழில் நடிகர் சிம்புடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி படத்தில் நடித்திருந்தார்.பூமி மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் மவுசு குறையாமல் தான் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.இந்த புகைப்படத்தை ரகசியமாக வைத்துள்ளார் ஆனால் யாரோ வலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டனர்.
இதனால் கோபமடைந்த நிதி அகர்வால் இதுகுறித்து அவரது இன்ஸ்ட்கிராமில்
“என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை பார்க்கிறேன்.இந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.