முக்கிய சினிமா பிரபலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் ! நடிகர்கள் இரங்கல் ! எப்படியோ மகன் நடிகராகிவிட்டார் !

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரும் , லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனருமான சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார் .
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார் . ஆனால் இன்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் . வி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இளைய மகனான அஸ்வின் ராஜ பல திரைப்படங்களில் காமடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

அஸ்வின் ராஜா ” பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகனாக அறிமுகமானாலும் . இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது கும்கி திரைப்படம்தான் . கடந்த மாதம் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது . இந்த நிலையில் தான் அஸ்வின் தந்தை சுவாமிநாதன் இன்று உயிரிழந்துள்ளார் .

வி சுவாமிநாதன் அஜித் , விஜய் கமல் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார் சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் என்ற படம் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். சுந்தர் சி தான் அந்த படத்தை இயக்கியிருந்தார்.
சுந்தர் சி உடன் அவர் தொடர்ந்து 5 படங்களில் பணியாற்றி இருக்கிறார். உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே என தொடர்ந்து சுந்தர் சி படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.
மேலும் தளபதி விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் பகவதி ஆகிய படங்களையும் தயாரித்தது சுவாமிநாதன் தான்.

பகவதி படத்தில் ஒரு காட்சியிலும் சுவாமிநாதன் நடித்து இருந்தார். அஜித்துடன் இரண்டு படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் உன்னை தேடி ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய படம் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், அதையும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கடைசியாக சுவாமிநாதன் தயாரித்திருந்த படம் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த சகலகலா வல்லவன் படம். அதனை சுராஜ் இயக்கி இருந்தார். வி சுவாமிநாதன் உயிரிழந்த தகவல் சற்றுமுன் வெளியான நிலையில் திரைத்துறையினர் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்