அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை ! EIA2020 வீடியோ வெளியிட்ட பெண் சற்றுமுன் என்ன செய்தார் தெரியுமா ? கிழிக்கும் நெட்டிசன்கள் !

EIA2020 அதாவது Environment Impact Assessment என்று சொல்லக்கூடிய இந்த புதிய சட்ட வரையறை கடந்த மார்ச் மாதம் தாக்கல்செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள குறை மற்றும் நிறைகளை சொல்வதற்கு வரும் ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டிருந்தது .
கடந்த 3 மாதமாக இதுபற்றி யாரும் பெரிதாக பேசாத நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த தலைப்பு வைரலாக பேசப்பட்டது . 83 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை முழுமையாக படித்து அறிந்துகொள்ளாமல் பலரும் அரைகுறையாக அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு பேச துவங்கினர்
அதுபோல தான் பத்ம பிரியா என்ற பெண்ணும் தனது Youtube பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட அது வைரலானது . ஆனால் அந்த வீடியோவில் EIA2020 முழுமையாக படித்து அதன் சாதக பாதகங்களை கூறாமல் உணர்ச்சியை தூண்டும் வகையில் EIA2020 யில் வெறும் பாதகங்கள் மட்டுமே இருப்பதுபோல உணச்சிபொங்க வீடியோ வெளியிட்டிருந்தார் .

வளங்கள் சுரண்டப்படும் , விவசாயம் அழியும் , மக்களால் தட்டிகேற்க முடியாது, இனி நாம் பிச்சை தான் எடுக்க வேண்டும் . என அடுக்கடுக்கான ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்தார் அவர் . இதே தலைப்பில் ரங்கராஜ் பாண்டே வும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் ஆனால் அவர் இந்த 83 பக்க அறிக்கையை படித்து அதன் சாதக பாதகங்களை கூறி , இது தேவை என்று கூறியிருந்தார் .
மேலும் EIA2020 பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறியிருந்த நிலையில் பயந்துபோன சென்னை தமிழச்சி பத்மப்ரியா சற்றுமுன் அந்த வீடியோவை தனது YOUTUBE பக்கத்திலிருந்து நீக்கிவிட்டு பதுங்கியுள்ளார் .

அவர் சொல்வது உண்மை என்றால் ஏன் வீடியோவை நீக்கவேண்டும் என்றும் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர் . மேலும் இதே விடியோவை டவுன்லோடு செய்து தங்கள் தளத்தில் பதிவுசெய்த சில பெரிய YOUTUBE சேனல்களும் இந்த வீடியோவை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது