நடிகை பூமிகாவா இது!! இந்த வயசுலயும் ரசிகர்களை கிறங்கடிக்கும் க வ ர் ச்சி யா ன புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நடிகைகள் வரவு அதிகரித்து கொண்டே போகிறது.திரைப்படங்களில் நன்றாக நடித்துவிட்டு பிறகு ஆளே காணாமல் போய்விடுவார்கள்.அதேபோல் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “பத்ரி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.இவர் 1978 ஆண்டு டெல்லியில் பிறந்தார் இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முதலில் விளம்பரங்கள் மற்றும் இசை ஆல்பம் போன்றவற்றில் நடித்து வந்தார்.
இவர் 2000 ஆண்டு “யுவகுடு” என்ற
தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். பின்னர் இவர் நடித்த “ரோஜா கூட்டம்” படம் அனைவராலும் ரசிக்கும்படியாக இருந்தது.ஒரு காலத்தில் இளைஞர்களின் மனதில் பேவரட் ஹீரோயினாக இருந்தவர்.

பூமிகா தொடர்ந்து தெலுங்கு, தமிழ்,இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரின் முதல் இந்தி திரைப்படமான “தேரா நாம்” 2003 ஆண்டு வெளிவந்தது.
தமிழில் இவரின் நடிப்பில் வெளிவந்த “பத்ரி”, “சில்லுன்னு ஒரு காதல்”, “ரோஜாக்கூட்டம்” படங்கள் எல்லாம் இன்றும் பலரின் பேவரட் திரைப்படமாக இருக்கிறது.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2007 ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு அழகிய மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்பதை விட்டு பிஸினஸ், பேமிலி என்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு 41 வயதாகும்.நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் பூமிகா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் புடவை, சுடிதார் தவிர பெரிதாக மார்டன் உடைகளில் கூட நடிக்காத பூமிகா தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
