இயக்குனர் ஷங்கரின் மருமகன் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் ! வழக்கு பதிவு

இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் முதல்வன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் விளையாடி வரும் மதுரை பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் தாமோதரனின் மகன் தான் ரோஹித் ஆவார். ரோஹித் தந்தை தாமோதரன் ஒரு தொழிலதிபராக உள்ள நிலையில் தனது மகனுக்காக தமிழ் நாடு பிரிமியர் கிரிக்கட் தொடரில் மதுரை பண்டர்ஸ் அணியை வாங்கி அதில் தனது மகன் ரோஹித்தை விளையாட வைத்து வருகிறார் . மேலும் தமிழ் நாடு கிரிக்கெட் அணியின் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் புதுச்சேரி அணியில் விளையாடி வருகிறார் ரோஹித்.

இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் உள்ளார். இந்த நிலையில் ரோஹித் மீது புதுச்சேரி பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.