57 வயதில் 23 வயது பெண்ணை திருமணம்!! தன் மகனை விட 3 வயது சிறிய பெண்ணை திருமணம் செய்த பப்லு பிரித்விராஜ் !! ரொமாண்டிக் புகைப்படங்கள்

பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார்.
அதன் பின்னர் கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அஜித் நடித்த அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார்.
அதன்பின்னர் 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின.
இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பிரபல நடிகை ராதிகா நடித்த தொலைக்காட்சித் தொடரான அரசி-யில் திருநங்கையாக நடித்தார். அது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய முதல்மனைவியில் திருமணம் செய்துகொண்டு 56 வயதில், மலேசியாவை சேர்ந்த 26 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதுபற்றிய சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் இப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.