30 செகண்ட் வீடியோ ல எல்லாமே தெரியுதே..!! இளசுகளை பதற வைத்த சீரியல் நடிகை பிரியங்கா!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார் நடிகை பிரியங்கா நல்கார்.இவர் 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் தனது 16 வது வயதில் பள்ளியில் படிக்கும் போதே அந்தாரி பந்துவையா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் இவர் தனது இளங்கலை படிப்பை
ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார்.


அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தமிழ் சினிமாவில்
வாய்ப்புகளை தேடி வந்தார்.பின்னர் 2013 ஆம் ஆண்டு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் சம்திங் சம்திங், நா சாமிரங்கா என சில படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தர வில்லை. இதனால் சின்னத்திரை சீரியல் பக்கம் திருப்பினார்.

இவர் தெலுங்கில் ஈ டிவியில் ஒளிபரப்பான மேகமாலா மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ஸ்ரவனா சமீராலு போன்ற சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.இந்த சீரியல்கள் மூலம் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இவர் தெலுங்கில் ஹைப்பர, நேனே ராஜு நேனே மந்திரி போன்ற சில படங்களில் நடித்தார்.
பின்னர் தமிழில் ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு படவாய்ப்புகள்
எதுவும் இல்லாததால் தற்போது ரோஜா சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்ட்கிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் முன்னழகு தெரிய உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.