கடற்கரையில் இளமை ததும்ப ததும்ப ஹாட் போட்டோ ஷூட்..!! ரசிகர்களை சூடேற்றும் நடிகை தன்ஷிகா!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சாய் தன்ஷிகா.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் 1989 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.


இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து திருடி, மறந்தேன் மெய் மறந்தேன் மற்றும் நிறம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இந்த படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை.
பின்னர் பேராண்மை படம் வெற்றி படமாக அமைந்தது.பின்னர் அருண் விஜய்க்கு ஜோடியாக மாஞ்சா வேலு படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


பின்னர் நில் கவனி செல்லாதே படத்தில் நடித்தார். இவர் 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவாவுடன் இணைந்து யா யா படத்தில் நடித்தார்.இவர் திறந்திடு சீசேன், உரு மற்றும் எங்க அம்மா ராணி போன்ற பல படங்களில் நடித்தார்.ஆனால் இந்த படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் ஆதியுடன் இணைந்து அரவான் படத்தில் நடித்தார்.பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் சிறந்த துணை நடிகையாக நடித்தார்.


இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தார்.
தற்போது பிரசன்னா,கலியரசன் நடித்து வரும் காலக்கூத்து படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவருக்கு பட வாய்ப்புகள் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார்.
தற்போது கடற்கரையை சூடேற்றுவது போல சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து வருகிறார்கள்.



