ஈரம் சொட்ட சொட்ட வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மிருகம் பட நடிகை பத்மபிரியா..!!
இயக்குனர் சேரன் இயக்கி நடித்திருந்த தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பத்மபிரியா.இந்த திரைப்படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பத்மபிரியா 1983 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை செகன்ராபாத் ஆந்திர பிரதேசத்தில் முடித்தார்.
2001 ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரா பிரதேஷ் என்ற அழகிய பட்டத்தையும் வென்றார்.
இவர் 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சீனு வசந்தி இலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் மலையாளத்தில்
அம்ருதம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.
தமிழில் தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமாகி பின்னர் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் செட்டிலானார். 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகியிருந்தார்.பின்னர் பட்டேல் சார் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.
தற்போது தமிழில் நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.இவர் அதிகப்படியான மலையாள படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தன்னுடைய இளமை காலங்களில் வெள்ளை நிற உடையில் நீர் சொட்ட சொட்ட எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.