ஐஸ்வர்யா ராய் என் அம்மா! அவரது 15 ஆவது வயதில் என்னை பெற்றெடுத்தார் என்று சர்ச்சையை கிளப்பிய இளைஞர்..!! உண்மையில் என்ன நடந்தது தெரியுமா??
1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார் ஐஸ்வர்யா ராய்.இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழி
படங்களில் நடித்து வருகிறார். இவர் 1973 ஆம் ஆண்டு கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார்.இவரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.
மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார்.பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான இராவணன் திரைப்படத்திலும், எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் 2007ஆம் ஆண்டு இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் தற்போது மங்களூரை சேர்ந்த 31 வயதான சங்கீதராய் குமார் என்பவர் ஐஸ்வர்யா மீது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.என்னை பெற்றெடுத்தது ஐஸ்வர்யா ராய்தான் என்று கூறி வீடியோ
ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராய் என்னை 1988 ஆம் ஆண்டு லண்டனில் பெற்றெடுத்தார்.
என்னை பெற்றெடுக்கும் அவருக்கு வயது 15 தான்.எனக்கு இரண்டு வயது வரை என் பாட்டி மற்றும் தாத்தா என்னை வளர்த்தனர் நான் விசாகபட்டினத்தில் வளர்ந்தேன். என்னுடைய பிறப்பு சான்றிதழை அழித்து விட்டனர்.அம்மா இல்லாமல் நான்
தவிக்கிறேன். என் அம்மாவின் போன் நம்பர் இருந்தால் யாராவது தாருங்கள் என்று கூறி வீடியோ பதிவிட்டுள்ளார். இது குறித்து அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் எந்த பதிலும் இதுவரை கூறவில்லை.