சட்டை பட்டனை கழட்டி விட்டு முண்டா பனியனுடன் போஸ் கொடுத்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா..!!
ரோஜா சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்கார். இவர் 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.ஹைதராபாத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.இவர் பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடனத்தில் மீது ஆர்வம் இருந்ததால் தனது 14 வது வயதிலேயே தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
தெலுங்கில் ஈ டிவியில் ஒளிபரப்பான மேகமாலா மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ஸ்ரவனா சமீராலு போன்ற சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.இவர் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தாலும் அந்த அளவிற்கு முண்ணனி நடிகையாக வரமுடியவில்லை.பின்னர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையா படத்தில் நடித்திருந்தார்.
இதைதொடர்ந்து திலீப்பின் நா சாமி ரங்கா , ஹைப்பர, நேனே ராஜு நேனே மந்திரி போன்ற பல படங்களில் நடித்தார்.
பின்னர் தமிழில் ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் காஞ்சனா 3 போன்ற ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் தமிழில் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.அதற்காக இவர் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.அதே போல லுங்கி மற்றும் முண்டா பனியனில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.