இளையராஜா , பாக்கியராஜ் இடைவெளிக்கு காரணம் ஈகோவா !

ராஜாவுக்கும் எனக்குமான இடைவெளிக்கு காரணம் ஈகோ தான். சாந்தனு எடுத்த பேட்டியில் பாக்கியராஜ் அதிரடி ! டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜிடம்
 
இளையராஜா , பாக்கியராஜ் இடைவெளிக்கு காரணம் ஈகோவா !

ராஜாவுக்கும் எனக்குமான இடைவெளிக்கு காரணம் ஈகோ தான். சாந்தனு எடுத்த பேட்டியில் பாக்கியராஜ் அதிரடி !

டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜிடம் அவர் மகன் சாந்தனு பாக்கியராஜ் பேட்டி எடுத்தார்.

அந்த பேட்டி விவரம் இதோ
அப்பாகிட்ட கேள்வி ஏதாவது இருந்தா அனுப்புங்கன்னு டிவிட்டரில் பதிவிட்டேன். நிறைய பேர் கேள்விகள் அனுப்பிச்சிருக்காங்க. அந்தக் கேள்விகளைத்தான் இப்போ கேட்கிறேன்’ என்றார் சாந்தனு.

‘சின்ன வீடு’ படத்திற்கு பின்னர் ஏழு ஆண்டு கழித்து தான் ‘ராசுக்குட்டி’யில்தான் இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தீர்கள்? ஏழு வருட இடைவெளி ஏன்?’’ என சாந்தனு கேள்வி!

சண்டைதான். சில நேரங்கள்ல இதை ஈகோன்னு கூட சொல்லலாம். பிரஸ்டீஜ் மேட்டர்னு கூட எடுத்துக்கலாம். அப்ப எல்லாம் ‘அடுத்த படத்துக்கு சப்ஜெக்ட் ரெடின்னு சொல்லுவேன். நாலு நாள் கழிச்சு உக்காரலம்னு சொல்லுவார். விஜிபில உக்காரலாம்னு சொல்லுவார். சேலத்துக்குப் போகலாம்னு சொல்லுவார். பவானில நம்ம தோட்டத்துக்குக் கூட வந்திருக்கார்.

அடுத்த படம் பண்ணும்போது கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க. பத்துநாள் முன்னாடியே சொல்லுங்க. கொஞ்சம் பீஸ்ஃபுல்லா போய் உக்காரலாம்னு இளையராஜா சொல்லிருக்காரு சரிங்கன்னு சொன்னேன்.

அப்புறம், படத்துக்கு கதை ரெடி பண்ணிட்டேன். போய் சொல்லிடலாம்னு போனேன். அப்ப அவருடைய உதவியாளர்கிட்ட, ‘ரெடியா இருக்கேன். எப்போ சொல்றாரோ போகலாம்னு சொன்னேன்னு சொல்லிருங்க’ன்னு சொல்லிட்டு வந்தேன்.

அப்புறம், அந்த உதவியாளர், ‘சாரை எதுக்கும் வீட்ல போய் பாத்திருங்களேன்’னு சொன்னாரு.வீட்ல எதுக்குங்க போய் பாக்கணும்? எப்பவும் ஸ்டூடியோலதான் பாப்பேன்’ன்னு சொன்னேன். ‘உடம்பு சரியில்லேன்னா சொல்லுங்க. வீட்ல போய் பாக்கறேன். சும்மா இப்படி கமிட்மெண்ட்டுக்காக சொல்லாதீங்க’ன்னு சொன்னேன்.

கொஞ்சம் ஒருமாதிரியா இருந்துச்சு. எல்லாரும் இதை ஈகோன்னு எடுத்துக்கிட்டாலும் சரி… பிரஸ்டீஜ்னு எடுத்துக்கிட்டாலும் சரி. ‘எல்லாரும் பாக்கறாங்க, எல்லாரும் பாக்கறாங்க’ன்னு உதவியாளர் திரும்பத் திரும்ப சொன்னாரு. நான் கோச்சுக்கிட்டு வந்துட்டேன். எப்படி இருந்தாலும் இளையராஜா கூப்பிடுவாருன்னு நினைச்சேன்.

அப்புறம் அவர் ராஜாகிட்ட என்ன சொன்னாருன்னு தெரியல… அவர் என்னைக் கூப்பிடவே இல்ல. ஆனா ராஜா கூப்பிடலைங்கற விஷயம், மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது.

ராஜா, நம்மளைக் கூப்பிட்டு என்ன நடந்துச்சுன்னு ஒருவார்த்தை கேட்டிருக்கலாம், கேக்கவே இல்லையேன்னு வருத்தப்பட்டேன்’’ என்று தெரிவித்தார் பாக்கியராஜ்.

இந்த பதிலுக்கு பின்னர் அடுத்த கேள்வியை சாந்தனு இவ்வாறு கேட்டார். “உங்க அப்பா உங்களை நினைச்சு எப்போ பெருமைப்பட்டிருக்கார்னு கேளுங்க. எந்த அப்பாவும் தன் பையன்கிட்ட இதைச் சொல்லமாட்டாங்க?ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார்’’

’’ நீ சின்னப் பையனா இருக்கும்போது, ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்துல நடிக்கிறியா?’ ன்னு கேட்டதும், உடனே எந்தத் தயக்கமும் இல்லாம, ‘ஓகே’ன்னு சொன்னே பாரு… அது ஆக்டிங், ஆக்டிவிட்டீஸ்னு செயல்ல துடிப்பா இருந்தே பாரு அது எனக்கு பெருமையா இருந்துச்சு.

தசாவதாரம்’ படத்துல கமல் சார், ‘பல்ராம் நாயுடு’ கேரக்டர் பேசிருப்பாரே… நீ அதேமாதிரி பேசுனதைப் பாத்துட்டு, ஆச்சரியமா இருந்துச்சு. அதோட முக்கியமா, நீ டான்ஸ் ஆடுனது. இவன் எங்கே கத்துக்கிட்டான்,எப்படிக் கத்துக்கிட்டான். நமக்கும் டான்ஸுக்கும் சம்பந்தமே இல்லியே… இவன் நல்லா பிரமாதமா ஆடுறானேன்னு நினைச்சு பெருமையா இருந்துச்சு அப்ப அம்மாகிட்ட முறைப்படி டான்ஸ் கத்துக்கிட சொல்லு நல்லாருக்கும்னு சொல்லி, சேரச் சொன்னேன். நீ டான்ஸ் கத்துக்கப்போன”
என்றார்.

பின்னர் “அப்படியே நீ கீர்த்தி உனக்கு மனைவியா வரணும்னு பிக்ஸ் பண்ணிட்ட இந்த விஷயம் ரொம்ப நாளா எனக்கு தெரியாம இருந்துச்சு.
உங்க அம்மா ஒரு நாள் என் கிட்டே ” நம்ம சோனு லவ் பண்றான்னு” சொன்னா என்னது லவ்வா யாரு அது என்னனு கேட்டேன் அப்பத்தான் நீ மாஸ்டர் பொண்ணை லவ் பண்றது தெரிய வந்தது.

நான் நிறைய புரோகிராம்ல கீர்த்தியை பாத்திருக்கேன் ‘பரவாயில்லியே… நல்லா பேசுறாங்கனு நினைச்சிருக்கேன்.

அப்புறம் டான்ஸ் க்ளாஸ் போவும் போது பழக்கம். லவ்வுனெல்லாம் சொன்னாங்க. ஓகே பண்ணியாச்சு’’ என்று சிரித்தபடி பதிலளித்தார் பாக்கியராஜ்..

Tags