“அஜித்துக்கு நன்றி” -Dr. கார்த்திக் நாராயணன், LIT SKILLS LEARNING.!!
நடிகர் அஜித் அவர்களின் ஆலேசனைப்படி ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கி சமூக சேவை ஆற்றி வருகிறார்கள் தாக்ஷா குழு.
விவசாயம், கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு இவர்களின் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இப்போது, தமிழக அரசுடன் இணைந்து கொரோனாவை ஒழிப்பதற்கு, கிருமி நாசினி தெளிக்கும் குட்டி விமானத்தை ‘தாக்ஷா’ உருவாக்கியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் இந்த விமானம் 3 லட்சம் சதுர கி.மி.பரப்பளவை உள்ளடக்கிய பகுதியில் 900 லிட்டர் கிருமி நாசினியை தெளித்துள்ளது.
’தாக்ஷா’வின் பிரதான ஆலோசகர்களில் ஒருவர், நடிகர் அஜீத்.
சென்னையில் இருந்தால் எம்.ஐ.டி.க்கு வந்து தாக்ஷா குழுவினருடன் அளாவளாவி விட்டு போவது அவரது வழக்கம்.
’’ கொரோனாவை ஒழிக்கும் தங்கள் பணியில் நடிகர் அஜீத் நேரமும், சந்தர்ப்பமும் இருந்தால் பங்கேற்க கூடும்’’ என்கிறார்.
அவர் எங்களுடன் இணைந்து சென்னை கொரோனா தடுப்பு பணிகளில் உத்வேகம் அளித்து அமைதியாக பல முன்னெடுப்புகளையும், உதவிகளையும் செய்து வரும் நடிகர் அஜித்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.