ரசிகர்கள் கேட்ட பீச் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!! வைரலாகும் போட்டோஸ் !!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “காற்றின் மொழி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் “ராங்கிதரங்கா” படத்தின் மூலம் அறிமுகமானார்.இதையடுத்து 2016 ஆம் ஆண்டு “கோலி சோடா” என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் “சல்தே சல்தே” படத்தின் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் தெலுங்கு சீரியல் “மௌன ராகம்” சீரியலில் நடிக்க தொடங்கினார்.

மௌன ராகம் சீரியல் தமிழில் காற்றின் மொழி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு பிரியங்காவே கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் கதாநாயகனாக சஞ்சீவும் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் குடும்ப பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் பிரதீக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் சீரியல்களில் குடும்ப பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றும் பிரியங்கா அடிக்கடி மாடன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இவரிடம் சில ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பீச்சில் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரும் பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  திருமணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மணப்பெண் ஆடிய நடனம் ! மெய்மறந்து ரசித்த உறவினர்கள் ! வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.