இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா..!! ரசிகர்களுக்கு தரிசனம் தரும் நடிகை சுரேகா வாணி!! மகளுடனே போட்டியா?
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில்
முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “மெர்சல்”, அஜித் நடித்த “விஸ்வாசம்”, தனுஷுடன் “உத்தம புத்திரன்” , சிம்பு நடித்த “வந்தா ராஜாவாதான் வருவேன்” போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழை விட தெலுங்கில் பல படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகை என்று பெயர் பெற்றவர்.
இவர் 1977 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் பிறந்தார்.வாணி தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சுரேஷ் தொலைக்காட்சிகளில் இயக்குனராக பணியாற்றினார்.
பின் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.சுரேகா நடித்த படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.இதனால் இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் இவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய திரைப்படம் தான் தெய்வத்திருமகள். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இளம் நடிகைகளுடன் போட்டி போடும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 42 வயது ஆனாலும் செம்ம ஃபிகர் என்று எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.