அரை டிரௌசர் போட்டு கொண்டு க்ளாமர் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!!
பிரபல சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென கவர்ச்சி படத்தை வெளியிட்டு வருகிறார். சமீப காலமாக இவர் அல்டரா மாடர்னாக திரிந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அரை டிராயர் ஒன்றில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாலிவுட் படங்களில் நடிக்கவா இப்படி செய்கிறீர்கள்?? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

