நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை! மன உளைச்சல் காரணமாக 15 வயது சிறுமி தற்கொலை?…
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்தகாரணத்தினால் மனச்சோர்வுக்குள்ளான 15 வயது சிறுமி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்தமான் நிக்கோபாரில் வசிக்கும் சிறுமி நடிகரின் தற்கொலையால் மன அழுத்தத்திற்கு ஆளான நிலையில் 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டடுள்ளார்
கடந்த சில நாட்களாக, இச்சிறுமி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாகவும் மேலும் இந்த சோகமான நிகழ்வு தொடர்பாக அவர் தனது நோட்பேடில் சில வரிகளை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது தாத்தா அவரைத் திட்டினார் எனவும் இதனால் சோகத்தில் இருந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர் .
நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து ஏற்கனவே அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார், இதனிடையே அவரது தாத்தாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் அவரது மனநிலையை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.