நந்தினி சீரியல் நடிகையா இது!! கிளுகிளுப்பாக உடையில் கவர்ச்சியை காட்டும் நடிகை நித்யா ராம்..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நந்தினி” சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இவர் 1990 ஆண்டு கர்நாடகவில் பிறந்தார். நித்யா ராம் ஒரு கலை குடும்பத்திலிருந்து நடிப்பு துறைக்கு வந்தவர்.இவரின் தந்தை கே.எஸ் ராமுவும், சகோதரி ரச்சிதா ராம் இருவரும் நடன கலைஞர்கள் ஆவார் இவரும் நடனக்கலை கற்றார். இவர் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றார் பின் சில காலம் அந்த துறையில் பணியாற்றினார்.ஆனால் இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிப்புத்துறைக்கு வந்தார்.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு ஜீ கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பென்கியல்லி அரலிடா ஹீவு” என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அவள்” சீரியலில் ஷாலினி என்ற காதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு “முது பிடா” என்ற தெலுங்கு சீரியலில் இரட்டை கதாப்பாத்திரம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.இந்நிலையில் 2015ஆம் ஆண்டு “முட்டு மனசே” என்ற கன்னட படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக அரு கவுடா என்ற நடிகர் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் படம் ஆகும்.இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2017 ஆண்டு தமிழில் “நந்தினி” சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த சீரியல் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார் நித்யா. நித்யாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று கொண்டனர். சமீபத்தில் நித்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மலையாளத்தில் “அடுக்களையில் பணியுண்டு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருந்த இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வருகிறார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.