ஜீ தமிழ் சீரியல் நடிகை ஆயிஷா வின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!! அலைபாயும் ரசிகர்கள்!!
தமிழ் மக்களிடையே சீரியல் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. பெரும்பாலான வீடுகளில் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.அதை சிறந்த பொழுதுபோக்காக கருதுகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார் ஆயிஷா.இவர் 1993 ஆண்டு கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சி சீரியலில் 2017 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2018 ஆண்டு பொன் மகள் வந்தாள் சீரியல் நடிக்க தொடங்கினார்.
தனது துறுதுறு நடிப்பால் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தார்.அந்த சீரியலில் இயக்குனருடன் ஏற்ப்பட்ட கசப்பு காரணமாக அந்த தொடரில் இருந்து நீங்கினார்.பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” சீரியலில் நடிக்க தொடங்கினார் . அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பிடித்தது.அந்த சீரியல் முடிவு பெற்றது.

இந்நிலையில் 2019 ஆண்டு பிரபல ஜீ தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் ஆயிஷா ஆணாக மாறி நடித்து வருகிறார். அந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் மேலும் வலுப்படுத்தும் படி நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டும் அல்லாமல் அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு மொழி சீரியாலிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக இவ்வளவு நாள் வீட்டில் பொழுதை கழித்த இவர் தற்போது மீண்டும் சீரியல் படப்பிடிப்பு தொடங்கியதால் அதில் நடித்து வருகிறார். தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது.
