டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கைது ! டிக் டாக் செய்துகொண்டிருந்தபோதே தூக்கிய காவல் துறை !

தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ள நிலையில் அதில் முக்கியமானவர் ஜிபி முத்து . இவர் சீன டிக் டாக் செயலிக்கு அடிமையாகியுள்ள நிலையில் குடும்பத்தை விட்டு ஒதுக்கிவைக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் .

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த ஜிபி முத்து அங்கு மரக்கடை வைத்துள்ளார் . இப்போது மரக்கடையை சரியாக கவனிக்காமல் டிக் டாக் மீட் என்று ஊர் ஊராக சுற்றிவருவதாக கூறப்படுகிறது . இதனால் இவரை டிக் டாக் பைத்தியம் என்று இவரது குடும்பத்தினர் கூறுவதாக இவரே ஒரு வீடியோவில் கூறினார்

மேலும் தன் மகளை வலுக்கட்டாயமாக டிக் டாக்கில் காட்டியதுடன் அவரது மகளின் கோபமான முகத்தை ஒரு குறிப்பிட்ட சாதி பெண்களுடன் ஒப்பிட்டு இழிவாக பேசினார் . இதனால் ஆத்திரமடைந்த மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ஒருவர் முதலைமைச்சரின் தனி பிரிவுக்கு புகாரளித்தார் .

இதனால் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மரக்கடையில் டிக் டாக் செய்துகொண்டிருந்த ஜி பி முத்துவை கைதுசெய்தனர் . பின்னர் அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து கெஞ்சிய நிலையில் அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு எச்சரித்து விடுவித்தனர் . இனி தான் டிக் டாக் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் இவர் .

Click  திருமணம் முடிந்து பிரிந்து செல்லும் அக்காவிடம் பாச போராட்டம் நடத்தும் தங்கை வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.