காருக்குள் இருந்து புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர் ! வாயை பிளந்த ரசிகர்கள் வைரல் !
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.தற்போது இவருக்கு 30 வயதாகும். இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.அந்த சீரியல் வெற்றி பெற்றதை அடுத்து 2017 ஆண்டு நடிகர் வைபோ நடித்த “மேயாத மான்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.அதன் பிறகு இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.இவர் கடைக்குட்டி சிங்கம், மாபியா போன்ற படங்களில் நடித்தார்.

பெரும்பாலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருபவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். ஆனால் இவர் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து அதன் மூலம் நல்ல வெற்றி படங்களை கொடுத்தார்.
இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடையை நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கமல் நடிக்கும் “இந்தியன்-2”, “பொம்மை'” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.ஹரீஸ் கல்யாண் நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்துக்கு “ஓமணப்பெண்ணே” என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தொழில் அதிபராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக நீண்ட நாட்களாக வீட்டில் இருந்த இவர் தற்போது வெளியே அவுட்டிங் செல்கிறார் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது வெளியே செல்லும் போது காரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது.

