தமிழ்நாட்டின் முதல் நீளமா ஈரடுக்கு பாலம் – பெயர் தெரியுமா?
தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமான சேலத்தில் மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை எதிர் கொள்ளும் பொருட்டு கடந்த 2016 அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஈரடுக்கு பலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 320cr துவங்கப்பட்ட இந்த கட்டுமான பணியாது 2020ஆம் ஆண்டு சுமார் 441cr செலவில் கட்டிமுடிக்கப்பட்டு தற்போதய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இன்று திறக்கப்படவுள்ள இதுவே தமிழ்நாட்டின் முதல் நீளமான ஈரடுக்கு பாலம் ஆகும். இந்த பாலத்தின் மொத்த நீளம் 7.8 km ஆகும்.
பாலம் இன்னைக்கும் இடங்கள்:-
1 ) AVR ரௌண்டான முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை – புரட்சி தலைவர் MGR பாலம்
2 ) குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரை – புரட்சி தலைவி ஜெயலலிதா பாலம்
இதனால் மக்கள் சேலம் புறநகர் பகுதியில் இருந்து மாநகர் பகுதிக்கு போக்குவரத்து நெரிசல் இன்றி மிக எளிமையாக வந்தடையலாம்.
இதுமட்டும் இன்றி சேலத்தில் முழுவாடி கேட், லீ பஜார், மணல்மேடு, மாமாங்கம் போன்று இன்னும் பல இடங்கள் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.