சற்றுமுன் முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ! மாணவர்கள் , பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளதாக இருந்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது இந்நிலையில் தான் தேர்வை முழுமையாக ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .

ஏற்கனவே 2 முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 3 ஆவது முறையில் முழுமையாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது . தேர்வை ரத்துசெய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்த நிலையில் நீதிமன்றமும் இது தொடர்பாக தமிழக அரசை கேள்வி எழுப்பி இருந்தது . இந்நிலையில் இன்று இந்த அரவிப்பு வெளியாகியுள்ளது .

மேலும் காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவேட்டை கொண்டு மாணவர்களின் மதிப்பெண் வெளியிடப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசு . இந்த ஆண்டு அணைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது . இந்த செய்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சற்று ஆசுவாசம் அடைய செய்துள்ளது

Click  தந்தை மகன் இறப்புக்கு நீதி கேட்டு திரண்ட கோலிவுட் திரையுலகம்.

Leave a Reply

Your email address will not be published.