சொந்த நாட்டுக்காக ஏலத்தில் விடும் மியா காலிஃபா ! என்ன விலை தெரியுமா ? உங்களிடம் அவ்வளவு பணம் இருந்தால் நீங்களும் வாங்கலாம் ! முழு விவரம்
உலகப்புகழ்பெற்ற ஆ பா ச பட நடிகை மியா காலிஃபா தனது தாய் நாடான லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது அடையாளமான கண் கண்ணாடியை ஏலம் விட முடிவுசெய்துள்ளார் . கடந்த 4 ஆம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடி விபத்து நடந்தது . கவனிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த 1500 டன் அமோனியம் நைட்ரைட் தான் இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது

இந்த விபத்தால் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 110 பேர் மயமாகியுள்ளனர் 6000 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதனால் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல நாடுகளும் , தன்னார்வலர்களும் லெபனானுக்கு உதவி வருகின்றனர் ,

இந்த வகையில் லெபனான் நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆ பா ச பட நடிகை மியா காலிஃபா , தன் தாய் நாட்டிற்கு உதவ முடிவுசெய்துள்ளார் அதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் கண் கண்ணாடியை ஏலத்தில் விட முடிவுசெய்து . ஈபே இணையதளத்தில் ஏலத்திலும் விட்டுள்ளார் . அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மியா காலிஃபா !

அவர் நடித்த பெரும்பாலான வீடியோக்களில் கண் கண்ணாடியுடன் தான் வருவார் அதனால் அந்த கண்ணாடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு .மியா காலிஃபா வின் கண்ணாடிக்கு ஆரம்ப விலையாக ஒரு லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் 75 லட்சம் ரூபாய் நிர்ணயிக்க பட்டுள்ள நிலையில் பலரும் ஏலம் கேட்டு வருகின்றனர்
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்