இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர்கள் ! ஆவேசமாக பதிவிட்ட ராஜ்கிரண் ! என்ன சொன்னார் தெரியுமா ?

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து
 
இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர்கள் ! ஆவேசமாக பதிவிட்ட ராஜ்கிரண் ! என்ன சொன்னார் தெரியுமா ?

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் . அதனால் வேக வேகமாக அந்த விடீயோக்களை தங்கள் சேனலில் இருந்து டிலீட் செய்து வருகிறது கருப்பர் கூட்டம் .

இந்நிலையில் சில நடிகர்கள் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக குரல் எழுப்ப துவங்கியுள்ளனர் . சதுரங்க வேட்டை படத்தில் நடித்த நடராஜ் ( நட்டி ) முதலில் குரல் கொடுக்க அவரை தொடர்ந்து நடிகை கஸ்தூரி , நடிகர் பிரசன்னா ஆகியோர் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராகவும் இந்துக்களுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர் .

இப்போது நடிகர் ராஜ்கிரண் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக தனது Facebook பக்கத்தில் இரண்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார் முதல் பதிவில்

“”கந்தர் சஷ்டி கவசம்”.
ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.
அது, அவனது சுதந்திரம்.
முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
“கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”.
இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன…
இறைவனை நம்பாதோர்க்கு,
“நம்பாமை” என்பது,
அவர்களின் சுதந்திரம்.
நம்பிக்கை கொண்டோர்க்கு,
“நம்புதல்” என்பது,
அவர்களின் சுதந்திரம்.
இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.
தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது…
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,
இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது…”

இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர்கள் ! ஆவேசமாக பதிவிட்ட ராஜ்கிரண் ! என்ன சொன்னார் தெரியுமா ?

என்றும் தனது இரண்டாவது பதிவில்

“நபிகளார் கொண்டுவந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்திற்கும் உறுதியான சித்தாந்தத்திற்கும் ஒரு மாற்று இருந்தால் அதை முன்வைத்து வாதாடி இந்த மக்களை தடுத்திடலாம். அவ்வாறு ஒரு மாற்றுத் திட்டம் எதுவும் தங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இதுதான்! கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்றவர்களிடம் உள்ள ஒரே குறுக்கு வழி வசைபாடுவதும் கேலி செய்வதும் கேலிச்சித்திரங்கள் வரைவதும் அவதூறு கூறுவதும்தான்!

உலகெங்கும் கோடானுகோடி மக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் அளவுக்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்த அவரை காமவெறியன் என்றும் அயோக்கியன் என்றும் வாய்கூசாமல் வசை பாடுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலமும் கார்டூன்கள் மூலமும் சித்தரித்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இணையதளம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் எப்படியெல்லாம் அவரை தவறாக இட்டுக்கட்டி சித்தரிக்க முடியமோ அவ்வாறெல்லாம் சித்தரித்தும் இவர்களின் வெறி அடங்குவதில்லை!

ஆனால் இவர்களின் இந்த சதித்திட்டங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்பதையே உலகம் நமக்குப் பாடமாக போதிக்கிறது. இந்த மாமனிதர் மறைந்து நூற்றாண்டுகள் பதினான்கு கடந்து விட்டன. இவர் போதித்த மார்க்கத்தின் வளர்ச்சி என்றும் எறுமுகத்தையே கண்டு வருகிறது, உலக மக்கள் தொகையின் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியை இன்றுவரை ஈர்த்துள்ளது எனும் உண்மையே அதற்கு சான்றாக நிற்கிறது! தொடர்ந்து இது உலகின் எந்த ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். காரணம் அவர் போதித்தது இவ்வுலகின் உரிமையாளனும் பரிபாலகனும் ஆகிய இறைவனின் மார்க்கம்!”

என்றும் கூறியுள்ளார் . அணைத்து திசைகளிலும் கண்டன குரல் எழுவதால் இந்த கருப்பர் கூட்டத்திற்கு சிக்கல் வலுத்துள்ளது . இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Tags