அழகிய ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு “யாரடி நீ மோகினி”சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!!
விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் முதன்முதலில் அறிமுகமானார் நடிகை
சைத்ரா ரெட்டி.இவர் 1993 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவை சேர்ந்தவர்.இவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு
சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் நுழைந்தார்.
இவர் கன்னடத்தில் அவனு மட்டே வர்வாணி சீரியல் மூலம் அறிமுகமானார்.
இவர் கன்னடத்தில் வெளியான ரூகுடூ ,
எனேது ஹேசரிடலி போன்ற சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான யாரடி நீ மோஹினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியல் மூலம் இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.சமீபத்தில் இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளர் பணியாற்றி வரும் ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தமிழில் சிபியுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர்
திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.