சென்னையை நோக்கி வரும் மிகப்பெரிய ஆபத்து ! கடலோர சென்னையயே காணாமல் போகும் ! ஐஐடி நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் ! உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்
தமிழகத்தில் தலைநகராக உள்ள சென்னை , இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று , பல நூற்றாண்டாக முக்கிய வணிக நகரமாக விளங்கும் சென்னை சமீப காலத்தில் நிறைய ஆபத்துகளை சந்தித்து வருகிறது , சுனாமி , 2015 சென்னை பெருவெள்ளம் , இப்போது கொரோனா வைரஸ் . இந்நிலையில் சென்னை ஐஐடி யை சேர்ந்த பேராசிரியர் பாலாஜி தலைமையிலான குழுவினர் வானிலை மாற்றங்கள் பற்றியும் அதனால் சென்னனைக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் பற்றியும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர் அதில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
பருவநிலை மாற்றத்தால் வரும் ஆண்டுகளில் அதிக மழை சென்னையில் பொழியும் என்றும் . இந்த மழையால் சென்னை கடற்கரைகள் காணாமல் போகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் 2035 , 2055,2075 என 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய மழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளத்தை சென்னை சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது , மேலும் அடுத்ததாக சென்னையில் பெய்யும் கனமழை 2015 ஆம் ஆண்டை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த ஆய்வானது 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தரவுகளை கொண்டு அதேபோல எதிர்காலத்தில் ஏற்படுமா ? என்ற கோணத்தில் நடத்தப்பட்டது . மேலும் இதுபோன்ற பெருமழை பொழியும் போது அதில் ஏற்படும் வெள்ளம் கடலில் கலக்க முடியாமல் தேங்கி பெரும் அழிவை ஏற்படுத்தும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த ஆய்வின் முடிவுகள் கரண்ட் சயின்ஸ் என்ற ஜர்னலில் பேப்பராக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்