முதன் முறையாக நீச்சல் ஆடையில் நடிக்கும் கயல் ஆனந்தி..!! வாயடைத்து போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஆனந்தி. ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை கொடுக்கவில்லை.பின்னர் இவர்
பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் என்ற படத்தில் நடித்தார்.இதன் பின்னர் தான் இவரை அனைவரும் கயல் ஆனந்தி என அழைக்கத் தொடங்கினர்.
இவர் 1996 ஆம் ஆண்டு தெலுங்கானாவில்
வாரங்கல் பகுதியில் பிறந்தார்.பின்னர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் முதன்
முதலில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் ஒரு சில தெலுங்கு படங்களை நடித்தார்.
இதையடுத்து தமிழில் பொறியாளன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, சண்டிவீரன் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற பல படங்களில் நடித்து வெற்றியை பெற்றார்.
இவர் தெலுங்கில் ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில்
சினிமா உதவி இயக்குனர் சாக்ரடீசை
என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த தெலுங்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.அதில் சில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது
தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகும் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம்.கவர்ச்சி நோ சொன்ன கயல் ஆனந்தி தற்போது பிகினி உடையில் நடிக்கும் அளவுக்கு வந்துவிட்டாரே என்று வாயடைத்து போய் உள்ளார்கள் ரசிகர்கள்.